Pain
#படித்ததில் கலங்கியது...
கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே
**கொடுமை**
தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன்,
தண்ணீரைக் கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன்,
மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க ஆளில்லால் போகிறான்.
**ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் தன்னிச்சையாக நுழைய முடியாது.
**வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூசுகிறார்கள்.
**என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ
**கொடுத்ததை கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.
**ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.
**தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆளிருக்காது.
* *இதெல்லாம் என் உறவுக்குள்ளே,
**நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
**துளியும் அதிகப்படியில்லை
.**என் கணவர் காலை எட்டரை மணிப் போல
**சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.
**காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.
**இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காலேயே ரெண்டாவது காபி கொடுத்துடுவேன்.
**எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?**இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.
**மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!**சகோதரிகளே!!
**யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
**உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!
**முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!
ஒரு தடவ தான வாழப்போறீங்க...கணவனை கடவுளாக பாக்க வேண்டாம்...மனுசனா பாருங்க...
#Pain, #Life, #Trust, #Now, #Data, #Wife, #Husband,
Comments