Useful-details
*அறுசுவையும், எண்ணங்களும்..!*
*நாவடக்கம்...!*
அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன.
அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்...
*இனிப்பு*
மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது. இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது. எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது. உடலைப் பெருக்க வைப்பது. குரலுக்கு நல்லது.
*புளிப்பு*
மண் தீ இணைந்தது. பசியைத் தூண்டும். ஜீரணத்தை மிகைப் படுத்தும். உணவின்பால் வேட்கையும் சுவை உணர்வையும் ஏற்படுத்தும். வெப்பத்தை கூட்டும்.
*உவர்ப்பு*
நீர் தீ இணைந்தது. உப்பு சுவை என்றழைப்பர். உப்பு உடல் உறுப்புகளுக்குள் கசிவையும் இசைவையும் ஏற்படுத்தும். வியர்வையை மிகுதிப்படுத்தி வெளியேற்றும்.
*கைப்பு(கசப்பு)*
நீர் வளி இணைந்தது . இந்த சுவையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் உடலுக்கு உறுதுணையாகிறது. பூச்சிகளைக் கொல்கிறது. விஷத்தை முறிக்கிறது. குறைந்தால் குருதி தூய்மை கெடுகின்றது.
*கார்ப்பு(காரம்)*
தீ வளி இணைந்தது. உணவின்பால் நாட்டத்தை உண்டாக்கும். செரிப்பாற்றலை மிகுவிக்கும்.விந்து நீற்றுப் போகும். உடல் ஆற்றல் குறையும். உடலில் நடுக்கம் ஏற்படும். வலிப்பு நோய் ஏற்படக் கூடும்.
*துவர்ப்பு*
மண் வளி இணைந்தது. செரிமானத்தைக் குறைக்கும். மிகுந்தால் வயிறு பொருமும். மலம் சிக்கும். சிறுநீர் தடைப்படும். ஆண்மை, பெண்மை குறையும். உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும். குறைந்தால் குருதி கெடும். கசியும்.
அறுசுவைகள் இந்த அளவிற்கு நம் உடலில் முக்கியமான கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன.
*வள்ளுவப் பெருந்தகை சொல்லும் போது...*
''யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'', என்பார்.
நாம் பொதுவாக நாவடக்கம் என்றால் பேசுவதைக் குறித்து பொருள் கொள்வோம்.
ஆனால், நாவடக்கம் என்பதை உணவில் சுவை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதையோ அல்லது சுவைகளைக் கைவிடுவதையோ கூட பொருளாகக் கொள்ளலாம்.
உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் போது நம் உணர்வுகள் தறிகெட்டு ஓடுகின்றன.
அதனால் அனைத்து சுவைகளையும் உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
உணவை எப்பொழுதும் விருந்தாக்காமல்...உணவே மருந்தாக்கி ஆரோக்கியமாக வாழ்வோம்...
*விமானத்தில் செல்லும்போது ஏற்படும் காற்றழுத்த மாறுபாடுகளே காது அடைப்புக்கு முக்கிய காரணம்...*
விமானம் ஏறும்போதும் (Takeoff) இறங்கும்போதும் (Landing), காதுக்கு வெளியே உள்ள காற்றழுத்தத்திற்கும், நடுத்தரக் காதில் உள்ள காற்றழுத்தத்திற்கும் இடையே ஏற்படும் சமநிலையற்ற தன்மையால், யூஸ்டாசியன் குழாய் (Eustachian tube) காற்றழுத்தத்தை விரைவாகச் சரிசெய்ய முடியாமல் இந்த அடைப்பு மற்றும் வலி ஏற்படுகிறது.
*முக்கிய காரணங்கள் மற்றும் விளக்கங்கள்*
*விமான காது (Airplane Ear)*
இது காது பரோட்ராமா (Barotrauma) என்று அழைக்கப்படுகிறது. காதுக்கு வெளியே அழுத்தம் குறையும்போது அல்லது அதிகரிக்கும்போது, செவிப்பறை உள்நோக்கி அல்லது வெளிநோக்கி இழுக்கப்படுவதால் இந்த உணர்வு ஏற்படுகிறது.
யூஸ்டாசியன் குழாய் பணி: காதுக்குள் இருக்கும் இந்தக் குழாய், காதுக்கு உள்ளேயும் வெளியேயும் அழுத்தத்தைச் சமமாக வைத்திருக்க உதவுகிறது. விமானம் வேகமாக உயரம் மாறும்போது, இந்த குழாயால் உடனுக்குடன் காற்றழுத்தத்தைச் சரிசெய்ய முடியவதில்லை.
*சளி அல்லது அலர்ஜி*
உங்களுக்கு சளி, இருமல் அல்லது சைனஸ் பிரச்சினைகள் இருந்தால், இந்த குழாய் அடைபட்டு, அழுத்தம் சமநிலையை அடைவது கடினமாகி, வலி அதிகமாக இருக்கும்.
*தவிர்க்கும் வழிகள்*
*பபுள்கம் மெல்லுதல்*
விமானம் ஏறும் மற்றும் இறங்கும் நேரத்தில் சுவிங்கம் அல்லது மிட்டாய் மெல்லுதல்.
தண்ணீர் குடித்தல்: அடிக்கடி தண்ணீர் பருகுவது அல்லது எச்சிலை விழுங்குவது (Swallowing) காதுகளைத் திறக்க உதவும்.
*யாவ்னிங் (Yawning)*
வாய் கொட்டாவி விடுவது போன்ற செயல்களைச் செய்வது.
*வால்சால்வா நுட்பம் (Valsalva Maneuver)*
மூச்சை மூடிக்கொண்டு, மூக்கின் வழியாக மெதுவாகக் காற்றை வெளியேற்ற முயல்வது.
இவற்றைச் செய்தும் காது வலி நீடித்தால், மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Comments